ரசித்த கவிதைகள்

நான் மிகவும் ரசித்த கவிதைகளில் ரா.பார்த்திபனின் கிறுக்கல்களும் ஒன்று.
இக்கவிதைகளை உங்களுடன் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன

 



என்னை நேசித்த
முதல்
கவிதை!!!
 
      





 “ நினைச்சா பொறையேறும்”
 நிஜமாயிருந்தா...

 நீ செத்திருக்கனுமே
இந் நேரம் 





நீ அழிக்க
காத்திருக்கிறது
ஈர மணலில்
என் பெயர்.












கிழக்கே போகும் ரயிலில்
நான் போகும்போது
மேற்கே செல்லும் தந்திக்கம்பமாக
எதிர்திசையில் நீ சென்றால்
எங்கு...எப்போது...சந்திப்பது?








                   

                   

ருகிப்போகவே
விரும்புகிறேன்
சுடராய்
நீ இருக்க...!!!















அழுதுகொண்டே
இருப்பேன்
   நீ
            அணைக்கும்வரை....!!!













விதை முளைக்க
நீர், நிலம்,ஒளி
எல்லாம் வேண்டும்

கவிதை முளைக்க
நீ போதும் எனக்கு...!!!











உள்ளுக்குள்
நீ
இருப்பதால்
யிரோடு
 நான்
இருக்கிறேன்..!












யார் வேண்டுமானாலும்
உன் காதலனாக
கனவனாக..
ஏன் கடவுளாக
நான் மட்டுமே
உன் காதலாக...!!!


















விலக
விலக
புள்ளிதானே..
நீ
எப்படி
விசுவரூபம்?










மெய் மறந்து

பொய் சொன்னாயா?
என்னை
காதலிக்கிறேன் என்று.












படைத்தல்
காத்தல்
அழித்தல்
கா..த...ல்..!!!













கண்னைத் திற
உலகம் தெரியும்

கண் மூடு
நான் தெரிவேன்.















பார்த்தல் பேசுதல
அணைத்தல்,
சுவைத்தல்
நீக்கியும்
நினைத்தல், நீடித்தல்
.....காதல்!

























எரித்தாலோ
புதைத்தாலோ
புதையாமல்
எரிந்துகொண்டிருக்கும்
உன்
 நினைவுத் தீ.!


















 நம்
நினைவில்
நான்..!!!
















என்னை கிறுக்கனாக்கிய
கிறுக்கியே....................................
................................................................................
................................................................................
புரியுதாடி?


















                  நான் .
               . யானாலும்
                  நீ மட்டும் ,
                                         




















கிழக்கில் விளக்காய்
நீ சிரிக்க

மேற்கில் இருட்டாய்
 நான் சிப்பேன்!















அதெப்படி..
உள்ளில் இருக்கும் உனக்கு
உருவம் மட்டும்
தொலைவில்...!!!


















அடியே..!!
’Total அம்னீசியா’ உனக்கு
‘Selective அம்னீசியா’ எனக்கு
நீ மட்டும்
நினைவில்.





















என்ன எழவு விஞ்ஞானமோ?
என் Chest X-ray ல்
ன் Photo.
























ரோஜா
மோதி
முள்ளுக்கு எலும்பு
முறிவு..!




















காதல்
கல்யானத்தில் முடியாது

ஆமாம்,
என் காதல்
ன் கல்யாணத்தில் முடியாது.


நன்றி
கிறுக்கல்கள்
ரா.பார்த்திபன்.
                                                                                                                                                               
                           
Tamil 10 top sites [www.tamil10 .com ] Buzz இல் பின்தொடர்க
 Add to Google Reader or Homepage Subscribe in Bloglines Add to My AOL Add to Pageflakes Powered by FeedBurner Add to fwicki Add to The Free Dictionary